வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  சில்லரை விற்பனை வணிகம் ஏப்ரலில் 23 சதவீதம் உயர்வு சில்லரை விற்பனை வணிகம் ஏப்ரலில் 23 சதவீதம் உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்தியாவில் கார் விற்பனை திட்டத்தை தள்ளிவைத்தது ‘டெஸ்லா’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2022
19:40

புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் தயாரிக்கும் திட்டத்தை, தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிறுவனம், இந்தியாவில் டெஸ்லா கார்களுக்கான இறக்குமதி கட்டணத்தை குறைப்பது குறித்து, அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. ஆனால், அம்முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவியதை அடுத்து, இந்தியாவில் ஷோரூம்களுக்கு தேவைப்படும் இடத்தை தேடும் முயற்சியை கைவிட்டுஉள்ளது.
டெஸ்லா நிறுவனம், கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே, இறக்குமதிக்கான வரியை குறைக்கும்படி அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தது.ஆனால் மத்திய அரசு, இறக்குமதிக்கான வரியை குறைப்பதற்கு முன்பாக, இந்தியாவில் கார் தயாரிப்பில் இறங்குமாறும்; அதன் பின் வரியை குறைப்பது குறித்து ஆலோசிக்கலாம் என்றும் தெரிவித்து விட்டது.
மேலும் இந்தியாவில் கார் தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வரும் நிலையில், டெஸ்லாவுக்கு மட்டும் தனிச் சலுகை வழங்குவது சரியாக இருக்காது என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டது.இருப்பினும், டெஸ்லா நிறுவனம் கடந்த பிப்ரவரி பட்ஜெட் அறிவிப்பின் போது சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்திருந்தது. ஆனால், பிப்ரவரியிலும் அப்படி எதுவும் நடக்கவில்லை.இதையடுத்து, டெஸ்லா நிறுவனம், தன்னுடைய கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்யும் திட்டத்தை நிறுத்தி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)