பதிவு செய்த நாள்
14 மே2022
19:42
புதுடில்லி:ரிசர்வ் வங்கி, கடந்த சில ஆண்டுகளாகவே, தங்கத்தை தொடர்ந்து அதிக அளவில் இருப்பு வைத்து வருகிறது.
இந்திய மக்கள் மட்டுமல்ல; ரிசர்வ் வங்கியும், தங்கத்தை வாங்கி குவிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது என்பதையே அதன் தரவுகள் காட்டுகின்றன.கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ரிசர்வ் வங்கி 100 டன்னுக்கும் அதிகமான தங்கத்தை, தன்னுடைய இருப்பில் சேர்த்துள்ளது.
குறிப்பாக, கடந்த 2017 – 18 நிதியாண்டிலிருந்து தங்கத்தை அதிகளவில் வாங்க துவங்கி உள்ளது. கடந்த 2017 -– 18 நிதியாண்டில், தங்கத்தின் இருப்பு 560.32 டன் ஆக இருந்தது, 2022 மார்ச்சில் 760.42 டன் ஆக உயர்ந்துள்ளது. இதில், 453.52 டன் தங்கத்தை, வெளிநாட்டில் ‘பேங்க் ஆப் இங்கிலாந்து’ மற்றும் ‘பேங்க் ஆப் இன்டர்நேஷனல் செட்டில்மென்ட்ஸ்’ ஆகியவற்றின் பாதுகாப்புடன் வைத்துள்ளது.
295.82 டன் தங்கத்தை உள்நாட்டில் கைவசம் வைத்துள்ளது. 11.08 டன் தங்கத்தை, தங்க டெபாசிட்டாக வைத்துள்ளது.இந்தியாவின் அன்னிய செலாவணி இருப்பில், தங்கத்தின் பங்கு, 2022 மார்ச் நிலவரப்படி, 7.01 சதவீதமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|