பதிவு செய்த நாள்
16 மே2022
05:59
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வில்
தெரிய வந்துள்ளது.
அண்மையில் ரெப்போ விகிதத்தை உயர்த்துவதாக ரிசர்வ்
வங்கி அறிவித்தது. ரெப்போ விகித உயர்வால், வீட்டுக் கடனுக்கான வட்டி
விகிதமும் உயரத் துவங்கியுள்ளது. இதனிடையே பணவீக்கமும் உயர்ந்து
வருகிறது.இந்நிலையில், வட்டி விகித உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை
உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, நாட்டின் ஆறு முக்கிய நகரங்களில்
வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக, ‘கிரிசில்’ நிறுவன
ஆய்வு தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு வீடுகளுக்கான தேவை 38 சதவீதம் வரை
அதிகரித்துள்ளதாகவும் நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. இது, ‘கோவிட் -19’
சூழலுக்கு முன் இருந்ததை விட அதிகமாகும். வீடுகளுக்கான விலையில் ஓரளவு
உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.வீடுகளை வாங்குவதற்கான ஆற்றல், கடந்த
2021ம் ஆண்டு வரை, 20 சதவீதம் மேம்பட்ட நிலையில், நிதியாண்டின் இரண்டாம்
பாதியில் குறைந்து இருப்பதாகவும் கிரிசில் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
வட்டி விகிதம், முத்திரைத் தாள் கட்டணம் போன்றவை தாக்கம் செலுத்தியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|