பதிவு செய்த நாள்
16 மே2022
21:44
புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., கடனுக்கான வட்டியை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி அறிவித்துள்ளது.அத்துடன், இந்த வட்டி உயர்வு 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதிர்ச்சி
கடந்த மாதம் தான் ஒரு வட்டி உயர்வை அறிவித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது தடவையாக வட்டியை உயர்த்தி, வங்கி கடன் பெற்றவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துஉள்ளது எஸ்.பி.ஐ.,இதையடுத்து, வீடு மற்றும் வாகன கடன்களை, எம்.சி.எல்.ஆர்., அடிப்படையில் வாங்கியவர்களின் மாதத் தவணை அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது.
பணவீக்கம் அதிகரித்து வருவதை அடுத்து, ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் அதிகரித்து, அண்மையில் அறிவித்தது. இதையடுத்து, எஸ்.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு வங்கிகள், வட்டி உயர்வை அறிவித்தன. தற்போது இரண்டாவது முறையாக வட்டி உயர்வை அறிவித்து உள்ளது
எஸ்.பி.ஐ.,இதையடுத்து, எஸ்.பி.ஐ., கடனுக்கான ஓராண்டுக்கான எம்.சி.எல்.ஆர்., வட்டி விகிதம் 7.10 சதவீதத்திலிருந்து, 7.15 சதவீதமாக உயர்ந்துள்ளது.
எதிர்பார்ப்பு
ஒரு மாதம் மற்றும் மூன்று மாத அடிப்படையிலான வட்டி 6.85 சதவீதமாகவும்; ஆறு மாத காலத்துக்கானது 7.15 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இரண்டு ஆண்டுக்கானது 7.40 சதவீதமும்; மூன்று ஆண்டுகளுக்கானது 7.50 சதவீதமாகவும் அதிகரித்து உள்ளது.
பெரும்பாலான கடன்கள், ஓராண்டு வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்டதாகும்.எஸ்.பி.ஐ., அறிவிப்பை தொடர்ந்து, விரைவில் மற்ற வங்கிகளும் வட்டி உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|