பதிவு செய்த நாள்
16 மே2022
21:46
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி குழுமம், ஏ.சி.சி., சிமென்ட்’ மற்றும் ‘அம்புஜா சிமென்ட்’ ஆகிய நிறுவனங்களை கைப்பற்றியதை அடுத்து, நேற்று இந்த இரு நிறுவன பங்குகளின் விலையும் சந்தையில் உயர்ந்தன.
அதானி குழுமம், சுவிட்சர்லாந்தை சேர்ந்த ‘ஹோல்சிம்’ நிறுவனத்தின் வசம் உள்ள, ஏ.சி.சி., சிமென்ட் மற்றும் அம்புஜா சிமென்ட் ஆகிய நிறுவனங்களை, 80 ஆயிரத்து 850 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளதாக கடந்த ஞாயிறு அன்று அறிவித்தது.
‘அதானி சிமென்ட்’ நிறுவனத்தை வலுப்படுத்தும் வகையில், நாட்டில் உள்ள இந்த இரு முன்னணி சிமென்ட் நிறுவனங்களையும் அதானி குழுமம் வாங்கி உள்ளது.அதானி குழுமத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, நேற்று பங்கு சந்தையில் அம்புஜா மற்றும் ஏ.சி.சி., நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.
இதற்கிடையே, அதானி நிறுவனம், ஏ.சி.சி., சிமென்ட் மற்றும் அம்புஜா சிமென்ட் ஆகிய நிறுவனங்களின் 26 சதவீத பங்குகளை சந்தையில் வாங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|