பதிவு செய்த நாள்
18 மே2022
00:58
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.இது குறித்து, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஏப்ரலில், மொத்தவிலை பணவீக்கம், 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது, இதற்கு முந்தைய மாதமான மார்ச்சில் 14.55 சதவீதமாகவும்; கடந்த ஆண்டு ஏப்ரலில் 10.74 சதவீதமாகவும் இருந்தது.இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தவிலை பணவீக்கம் அதிகரித்துள்ளதற்கு அடிப்படை உலோகங்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, உணவு தயாரிப்புகள், உணவு அல்லாத பொருட்கள், ரசாயனப் பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரித்தது காரணமாக அமைந்தது.கடந்த 13 மாதங்களாக, மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உள்ளது.
இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஏப்ரல் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த தரவுகள், கடந்த வாரம் வெளியாகின. அதில் சில்லரை விலை பணவீக்கம், கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 7.79 சதவீதமாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, ரிசர்வ் வங்கி பரமாரிக்க வேண்டிய இலக்கின் அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை விடவும் அதிகமாகும்.பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, ரிசர்வ் வங்கி, அண்மையில் ‘ரெப்போ’ வட்டியை 0.40 சதவீதம் அளவுக்கு உயர்த்தி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.தற்போது மொத்தவிலை பணவீக்கமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|