16 ஆயிரம் நிறுவனங்கள் புதிதாக பதிவு16 ஆயிரம் நிறுவனங்கள் புதிதாக பதிவு ... வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2022
21:05

ருச்சி சோயா’ பெயர் மாற்றம்

‘பதஞ்சலி’ நிறுவனம், அதன் உணவு சில்லரை வணிகத்தை, ‘ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்திடம், 690 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளது.

ருச்சி சோயாவை ஏற்கனவே பதஞ்சலி கையகப்படுத்தி விட்ட நிலையில், அந்நிறுவனத்தின் பெயரையும் மாற்ற திட்டமிடுகிறது.



கர்நாடகாவில் வேதாந்தா ஆலை

‘வேதாந்தா’ மற்றும் ‘பாக்ஸ்கான்’ நிறுவனங்கள் இணைந்து, ‘செமிகண்டக்டர் சிப்’ தயாரிக்கும் முயற்சியில் இறங்க உள்ளது. இதற்காக, இந்நிறுவனங்கள் 1.54 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளன.

மேலும் இதற்கான ஆலையை, கர்நாடகாவில் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

ஆலை அமைப்பது தொடர்பாக, கர்நாடக அரசுக்கும், வேதாந்தா நிறுவனத்துக்கும் இடையே பேச்சு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.



பணி நீக்கத்தில் ‘வேதாந்து’

கல்வி தொழில்நுட்ப நிறுவனமான வேதாந்து, 424 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது கிட்டத்தட்ட நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில், 7 சதவீதமாகும்.

இந்நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், கிட்டத்தட்ட 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக செய்திகள் வந்தன.



நிறுவனங்களை வளைக்கும் ‘டாடா’

‘டாடா’ குழும நிறுவனமான, ‘டாடா கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ்’ போட்டிகளை சமாளிக்கும் விதமாக, நுகர்பொருள் துறையில், விரிவாக்கம் உள்ளிட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, நுகர்பொருள் துறையைச் சேர்ந்த, கிட்டத்தட்ட 5 நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சியில், இந்நிறுவனம் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.



‘பார்தி ஏர்டெல்’ நியமனம்

‘பார்தி ஏர்டெல்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, கோபால் விட்டலை மீண்டும் நியமித்தது, ஏர்டெல் நிர்வாக குழு.

கோபால் விட்டல், மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார் என, ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)