பதிவு செய்த நாள்
18 மே2022
21:05
ருச்சி சோயா’ பெயர் மாற்றம்
‘பதஞ்சலி’ நிறுவனம், அதன் உணவு சில்லரை வணிகத்தை, ‘ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்திடம், 690 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளது.
ருச்சி சோயாவை ஏற்கனவே பதஞ்சலி கையகப்படுத்தி விட்ட நிலையில், அந்நிறுவனத்தின் பெயரையும் மாற்ற திட்டமிடுகிறது.
கர்நாடகாவில் வேதாந்தா ஆலை
‘வேதாந்தா’ மற்றும் ‘பாக்ஸ்கான்’ நிறுவனங்கள் இணைந்து, ‘செமிகண்டக்டர் சிப்’ தயாரிக்கும் முயற்சியில் இறங்க உள்ளது. இதற்காக, இந்நிறுவனங்கள் 1.54 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளன.
மேலும் இதற்கான ஆலையை, கர்நாடகாவில் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
ஆலை அமைப்பது தொடர்பாக, கர்நாடக அரசுக்கும், வேதாந்தா நிறுவனத்துக்கும் இடையே பேச்சு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பணி நீக்கத்தில் ‘வேதாந்து’
கல்வி தொழில்நுட்ப நிறுவனமான வேதாந்து, 424 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது கிட்டத்தட்ட நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில், 7 சதவீதமாகும்.
இந்நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், கிட்டத்தட்ட 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக செய்திகள் வந்தன.
நிறுவனங்களை வளைக்கும் ‘டாடா’
‘டாடா’ குழும நிறுவனமான, ‘டாடா கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ்’ போட்டிகளை சமாளிக்கும் விதமாக, நுகர்பொருள் துறையில், விரிவாக்கம் உள்ளிட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நுகர்பொருள் துறையைச் சேர்ந்த, கிட்டத்தட்ட 5 நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சியில், இந்நிறுவனம் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
‘பார்தி ஏர்டெல்’ நியமனம்
‘பார்தி ஏர்டெல்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, கோபால் விட்டலை மீண்டும் நியமித்தது, ஏர்டெல் நிர்வாக குழு.
கோபால் விட்டல், மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார் என, ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|