இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கைஇந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ... போனில் அழைப்பவர் பெயர் தோன்ற கே.ஒய்.சி.,யை பயன்படுத்த ‘டிராய்’ திட்டம் போனில் அழைப்பவர் பெயர் தோன்ற கே.ஒய்.சி.,யை பயன்படுத்த ‘டிராய்’ திட்டம் ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2022
20:45



‘எக்விடாஸ்’ நிறுவனர் ராஜினாமா


எக்விடாஸ் சிறு நிதி வங்கியின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பி.என். வாசுதேவன், தன் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, இந்நிறுவன பங்குகள் சரிவைக் கண்டன. மும்பை பங்குச் சந்தையில் 11.38 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டது.

அன்னிய நேரடி முதலீடு

நாட்டின் அன்னிய நேரடி முதலீடு, வரலாற்று சாதனையாக, கடந்த நிதியாண்டில், இதுவரை இல்லாத வகையில், 6.43 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதற்கு முந்தைய நிதியாண்டில், நாட்டின் அன்னிய நேரடி முதலீடு 6.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கரூர் வைஸ்யா வங்கி

மார்ச் மாத காலாண்டில், கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம், இருமடங்கு அதிகரித்து, 213.47 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்த லாப உயர்வுக்கு, வாராக் கடன் அளவு குறைந்தது காரணமாக அமைந்துள்ளதாக, வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் மார்ச் காலாண்டில், நிகர லாபம் 104.37 கோடி ரூபாயாக இருந்தது.

ரிசர்வ் வங்கியின் ஈவுத்தொகை

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டுக்கான ஈவுத் தொகையாக, 30 ஆயிரத்து 307 கோடி ரூபாயை, மத்திய அரசுக்கு வழங்குகிறது, ரிசர்வ் வங்கிகடந்த நிதியாண்டுக்கான இந்த ஈவுத் தொகையை அரசுக்கு வழங்க, ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு நேற்று அனுமதி வழங்கியது.

ஓலா, ஊபருக்கு ‘நோட்டீஸ்’

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், ‘ஓலா, ஊபர்’ ஆகிய கால் டாக்சி நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.இந்த கால் டாக்சி நிறுவனங்களில் சவாரி ரத்து, கூடுதல் கட்டணம் கோருவது போன்ற புகார்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, ஆணையம் அவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)