பதிவு செய்த நாள்
20 மே2022
20:45
‘எக்விடாஸ்’ நிறுவனர் ராஜினாமா
எக்விடாஸ் சிறு நிதி வங்கியின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பி.என். வாசுதேவன், தன் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, இந்நிறுவன பங்குகள் சரிவைக் கண்டன. மும்பை பங்குச் சந்தையில் 11.38 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டது.
அன்னிய நேரடி முதலீடு
நாட்டின் அன்னிய நேரடி முதலீடு, வரலாற்று சாதனையாக, கடந்த நிதியாண்டில், இதுவரை இல்லாத வகையில், 6.43 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதற்கு முந்தைய நிதியாண்டில், நாட்டின் அன்னிய நேரடி முதலீடு 6.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கரூர் வைஸ்யா வங்கி
மார்ச் மாத காலாண்டில், கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம், இருமடங்கு அதிகரித்து, 213.47 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்த லாப உயர்வுக்கு, வாராக் கடன் அளவு குறைந்தது காரணமாக அமைந்துள்ளதாக, வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் மார்ச் காலாண்டில், நிகர லாபம் 104.37 கோடி ரூபாயாக இருந்தது.
ரிசர்வ் வங்கியின் ஈவுத்தொகை
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டுக்கான ஈவுத் தொகையாக, 30 ஆயிரத்து 307 கோடி ரூபாயை, மத்திய அரசுக்கு வழங்குகிறது, ரிசர்வ் வங்கிகடந்த நிதியாண்டுக்கான இந்த ஈவுத் தொகையை அரசுக்கு வழங்க, ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு நேற்று அனுமதி வழங்கியது.
ஓலா, ஊபருக்கு ‘நோட்டீஸ்’
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், ‘ஓலா, ஊபர்’ ஆகிய கால் டாக்சி நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.இந்த கால் டாக்சி நிறுவனங்களில் சவாரி ரத்து, கூடுதல் கட்டணம் கோருவது போன்ற புகார்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, ஆணையம் அவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|