பதிவு செய்த நாள்
22 மே2022
20:25
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதும், இவர்களில்
பலர் ‘டிஜிட்டல்’ வழியில் முதலீடு செய்வதை விரும்புவதும் ஆய்வில் தெரிய
வந்துள்ளது.
நிதிச் சேவை நிறுவனமான ‘பெனாரி நாலட்ஜ்’ டிஜிட்டல்
முதலீடு வழி தொடர்பாக நடத்திய ஆய்வில், டிஜிட்டல் வழி முதலீடு 22 சதவீதம்
வளர்ச்சி அடைந்து, 2025ம் ஆண்டில் 14.3 பில்லியன் டாலராக இருக்கலாம் என
கணிக்கப்பட்டுள்ளது.மேலும், இளம் தலைமுறையினரில் பலரும் டிஜிட்டல் வழியே
தங்கள் முதலீட்டு பயணத்தை துவக்குவதாகவும், டிஜிட்டல் வழியை நாடுபவர்களில்,
இளம் தலைமுறையினரே அதிகம் இருப்பதாகவும் இந்த ஆய்வு
தெரிவிக்கிறது.
டிஜிட்டல் நிதி மேடைகள் பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பது
மற்றும் அதிக வாய்ப்புகளை வழங்குவது, முதலீட்டாளர்கள் இந்த வழியை
விரும்புவதற்கான முக்கிய காரணங்களாக அமைகின்றன. முதலீடு செய்பவர்களின் நிதி
இலக்குகளில் ஓய்வு கால சேமிப்பு முன்னிலை வகிக்கிறது.டிஜிட்டல் நிதி
மேடைகளை பயன்படுத்துபவர்களில் பெண்களும் கணிசமாக இருப்பதாக தெரிய
வந்துள்ளது. நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் மற்றும் முதல் அடுக்கு
நகரங்களில் இருப்பவர்கள் இந்த வசதியை அதிகம் நாடுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|