பதிவு செய்த நாள்
24 மே2022
21:39
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை வழங்கி உள்ளது.
விண்ணப்பம்
‘மெக்லாய்ட்ஸ் பார்மா, டி.பி.ஓ., டெக், சூரஜ் எஸ்டேட் டெவலப்பர்ஸ்’ ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு, செபி அனுமதி வழங்கி உள்ளது. இந்நிறுவனங்கள், கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து, நடப்பு ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில், புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தன.மெக்லாய்ட்ஸ் பார்மா நிறுவனம் தொற்று எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு, தோல் மருத்துவம் உள்ளிட்ட பல முக்கிய சிகிச்சை முறைகளில் பல்வேறு பார்முலாக்களை உருவாக்கி, அவற்றுக்கான மருந்துகளை தயாரித்து, சந்தைப்படுத்துகிறது. இந்நிறுவனம், 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது.
ரூ.2,100 கோடி
டி.பி.ஓ., டெக் நிறுவனம், பயணங்கள் சம்பந்தமான அனைத்தையும், ஒரே குடையின் கீழ் வழங்கும் புதிய தலைமுறை நிறுவனமாகும். இந்நிறுவனம், 2,100 கோடி ரூபாயை திரட்ட உள்ளது.ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டுள்ள சூரஜ் எஸ்டேட் டெவலப்பர்ஸ், 500 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|