பதிவு செய்த நாள்
24 மே2022
21:42
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை அடுத்து, பங்குச் சந்தையில், சர்க்கரை நிறுவன பங்குகள் விலை, நேற்று 14 சதவீதம் வரை சரிவைக் கண்டது.
உள்நாட்டில் சர்க்கரை விலை அதிகரித்து வருவதை அடுத்து, அதை தடுக்கும் வகையில், கடந்த 6 ஆண்டுகளில் முதன் முறையாக சர்க்கரை ஏற்று மதியை கட்டுப்படுத்துவது குறித்து, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.இதையடுத்து, பல்வேறு சர்க்கரை நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவைக் கண்டது.குறிப்பாக, ‘ரேணுகா சுகர்ஸ்’ நிறுவனம் அதிக இழப்பை சந்தித்தது.
இந்நிறுவன பங்குகள் விலை 13.84 சதவீதம் சரிவைக் கண்டது. ‘பல்ராம்பூர் சின்னி மில்ஸ்’ நிறுவனத்தின் பங்குகள் விலை, நேற்றைய வர்த்தகத்தில், 9.89 சதவீதம் சரிவைக் கண்டது.உலகளவில் இந்தியா மிகப் பெரும் அளவில் சர்க்கரை தயாரிக்கும் நாடாக உள்ளது. ஏற்றுமதியை பொறுத்தவரை, பிரேசிலுக்கு அடுத்து, உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|