பதிவு செய்த நாள்
24 மே2022
21:44
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதி நிலை முடிவுகளை அறிவிக்க, இம்மாத இறுதியில் கூடவுள்ளது.
ஈவுத் தொகை
நிதி நிலை முடிவுகளை அறிவிப்பது தொடர்பான இயக்குனர்களின் கூட்டம், இம்மாதம் 30ம் தேதி கூட இருப்பதாக, கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு, எல்.ஐ.சி., தெரிவித்து உள்ளது.கடந்த 17ம் தேதியன்று, இந்நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன.இதன் தொடர்ச்சியாக, மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் முழு நிதியாண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளை, நிர்வாக குழு பரிசீலித்து, அங்கீகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும், இந்த கூட்டத்தின் போது, ஈவுத் தொகை கொடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
வெளியீட்டு விலை
எல்.ஐ.சி., நிறுவன பங்கின் வெளியீட்டு விலை, 949 ரூபாயாக மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 17ம் தேதியன்று, 8.11 சதவீத தள்ளுபடி விலையில், 872 ரூபாயாக பட்டியலிடப்பட்டது.நேற்றைய தினம், இந்நிறுவன பங்கின் விலை, தேசிய பங்குச் சந்தையில், 823.90 ரூபாயாக இருந்தது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|