பதிவு செய்த நாள்
25 மே2022
21:40
புதுடில்லி-–ரிசர்வ் வங்கி முதன் முறையாக, ‘கிரெடிட்கார்டு’தாரர்கள் ‘ஆன்லைன்’ வாயிலாக செலவழித்தது, பி.ஓ.எஸ்., மிஷினில் தேய்த்து செலவழித்தது என இரண்டையும் தனித்தனி தரவுகளாக வெளியிட்டுள்ளது.
கிரெடிட் கார்டை பி.ஓ.எஸ்., எனும் பாயின்ட் ஆப் மிஷினில் தேய்த்து பணம் செலுத்துவதை விட, அதை ஆன்லைன் வாயிலாக பயன்படுத்துவது, கடந்த மார்ச்சில் அதிகரித்திருப்பதாக, இத் தரவுகள் தெரிவிக்கின்றன.இதையடுத்து, மின்னணு வர்த்தகம் வாயிலாக பொருட்களை வாங்கும் ஆர்வம், மார்ச்சில் அதிகரித்திருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், 7.3 கிரெடிட் கார்டுதாரர்கள், ஆன்லைனில் 68 ஆயிரத்து 327 கோடி ரூபாயை செலவு செய்துள்ளனர். அதேசமயம் 38 ஆயிரத்து 377 கோடி ரூபாயை பி.ஓ.எஸ்., மிஷினில் கிரெடிட் கார்டை தேய்த்து செலவு செய்துள்ளனர்.ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, கிரெடிட் கார்டு வாயிலாக, மார்ச் மாதத்தில் மட்டும், 1 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|