பதிவு செய்த நாள்
25 மே2022
21:42

புதுடில்லி,-–வீடுகளின் விலை, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என, ‘கிரெடாய்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 6 – 9 மாதங்களில், விலை 5 –10 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் கடந்த மார்ச் காலாண்டில், 8 முக்கிய நகரங்களில், வீடுகளின் விலை 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவித்துள்ளதாவது: புதுடில்லியில் வீடுகள் விலை 11 சதவீதம் வரை அதிகரித்து, ஒரு சதுர அடி 7,363 ரூபாயாக, மார்ச் காலாண்டில் உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஹைதராபாதில் 9 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் சென்னை, பெங்களூரு மும்பை ஆகிய இடங்களில், ௧ சதவீதம் அளவுக்கே விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் ௧ சதுர அடி 7,595 ரூபாயாக உள்ளது.பெங்களூருவில் 7,107 ரூபாயாகவும்; மும்பையில் 19 ஆயிரத்து, 557 ரூபாயாகவும் உள்ளது.தேவைகள் அதிகரிப்பு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஆகியவை காரணமாக, வீடுகள் விலையும் உயர்ந்துள்ளன. மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கிடையே, அடுத்த 6 – 9 மாதங்களில், விலை 5 – 10 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|