பதிவு செய்த நாள்
25 மே2022
21:51
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான வணிகத்திலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளது.அதிகளவில் விற்பனையாகும்,
அதேசமயத்தில் விலை மிகவும் குறைவான பியூச்சர் போன் தயாரிப்பை, இந்தியாவில் டிசம்பர் மாதத்திலிருந்து நிறுத்திக் கொள்ள இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஒப்பந்த தயாரிப்பு நிறுவனமான ‘டிக்ஸான்’ உடன் இணைந்து, இத்தகைய போன்களை சாம்சங் தயாரித்து வருகிறது. இந்நிலையில், டிசம்பருடன் தயாரிப்பை நிறுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நுழைவு நிலை போன்களுக்கு பதிலாக, கூடுதல் விலை கொண்ட போன்களை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, 15 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட போன்களை மட்டுமே தயாரிக்கும் முடிவுக்கு, சாம்சங் வந்துள்ளது.கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில்,
இந்தியாவில், பியூச்சர் போன்கள் விற்பனை 39 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.துவக்கத்தில் இப்பிரிவில் முன்னணியில் இருந்த சாம்சங், தற்போது மூன்றாவது இடத்தில், 12 சதவீத சந்தை பங்களிப்புடன் உள்ளது. ‘ஐடெல்’ நிறுவனம் 21 சதவீதத்துடனும்; லாவா 20 சதவீத பங்களிப்புடனும் முன்னிலை வகிக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|