பதிவு செய்த நாள்
25 மே2022
21:54
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு
உள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் தேதியிலிருந்து, சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, மத்திய அரசு.பண்டிகை காலத்தில் விலை அதிகரிக்காமல் இருக்க, ஜூன் முதல் தேதியிலிருந்து, ஒரு கோடி டன் அளவுக்கு மட்டுமே சர்க்கரையை ஏற்றுமதி செய்ய முடியும் என அறிவித்துள்ளது, அரசு.பங்கு வெளியீட்டில் ‘டிஜிட்’ ‘டிஜிட்’ இன்சூரன்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 3,900 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டு வருகிறது.இந்நிறுவனம், வரும் செப்டம்பரில் விண்ணப்பித்து, ஜனவரியில் பங்குகளை சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளது.
ஜோஹோ ரூ.20 கோடி முதலீடு
சென்னையை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ‘ஜோஹோ’, இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘ஜென்ரோபோட்டிக்ஸ்’ நிறுவனத்தில், 20 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.ஜென்ரோபோட்டிக்ஸ் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.பி_நோட் முதலீடு அதிகரிப்புஇந்திய மூலதன சந்தையில், ‘பி_நோட்’ எனும் பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக செய்யப்படும் முதலீடு, ஏப்ரல் மாதத்தில் சற்று அதிகரித்துள்ளது.ஏப்ரலில், பி நோட் முதலீடு 90 ஆயிரத்து, 580 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அன்னிய முதலீட்டாளர்கள் பார்வை
சீனாவிலிருந்து இந்தியா பக்கம் திரும்பி உள்ளதால் இந்த அதிகரிப்பு.அதானி லாபம் சரிவு ‘அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் ஸோன்’ நிறுவனத்தின் நிகர லாபம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 21.78 சதவீதம் சரிந்துள்ளது.இக்காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம் 1,033 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலாண்டில், லாபம் 1,321 கோடி ரூபாயாக இருந்தது.சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு
உள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் தேதியிலிருந்து, சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, மத்திய அரசு.
பண்டிகை காலத்தில் விலை அதிகரிக்காமல் இருக்க, ஜூன் முதல் தேதியிலிருந்து, ஒரு கோடி டன் அளவுக்கு மட்டுமே சர்க்கரையை ஏற்றுமதி செய்ய முடியும் என அறிவித்துஉள்ளது, அரசு.
பங்கு வெளியீட்டில் ‘டிஜிட்’
‘டிஜிட்’ இன்சூரன்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 3,900 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டு வருகிறது.
இந்நிறுவனம், வரும் செப்டம்பரில் விண்ணப்பித்து, ஜனவரியில் பங்குகளை சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளது.
‘ஜோஹோ’ ரூ.20 கோடி முதலீடு
சென்னையை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ‘ஜோஹோ’, இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘ஜென்ரோபோட்டிக்ஸ்’ நிறுவனத்தில், 20 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
ஜென்ரோபோட்டிக்ஸ் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.
‘பி – நோட்’ முதலீடு அதிகரிப்பு
இந்திய மூலதன சந்தையில், ‘பி -– நோட்’ எனும் பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக செய்யப்படும் முதலீடு, ஏப்ரல் மாதத்தில் சற்று அதிகரித்துள்ளது.
ஏப்ரலில், பி -– நோட் முதலீடு 90 ஆயிரத்து 580 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அன்னிய முதலீட்டாளர்கள் பார்வை சீனாவிலிருந்து இந்தியா பக்கம் திரும்பி உள்ளதால் இந்த அதிகரிப்பு.
அதானி லாபம் சரிவு
‘அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் ஸோன்’ நிறுவனத்தின் நிகர லாபம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 21.78 சதவீதம் சரிந்துள்ளது.
இக்காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம் 1,033 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலாண்டில், லாபம் 1,321 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|