பதிவு செய்த நாள்
26 மே2022
19:03
கோல்கட்டா : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் ஆறாயிரம் கோடிக்குமேல் லாபம் ஈட்டியுள்ளது. இதனால் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் இதன் பங்குகளை வாங்க போட்டியிட்டு வருகின்றனர்.
கோல்கட்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிலக்கரி தயாரிப்பு நிறுவனம் கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்). 1956ம் ஆண்டு இந்தியாவில் 212 நிலக்கரி சுரங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பெரும்பான்மையானவை அரசுடைமை ஆக்கப்பட்டன.
இந்தியாவின் 85 சதவீத நிலக்கரி உற்பத்தி சிஐஎல்-ல் நடைபெறுகிறது. 2 லட்சத்து 72 ஆயிரம் பணியாளர்கள் நாடு முழுவதும் சிஐஎல் நிறுவனத்துக்கு பணியாற்றுகின்றனர். உலகின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனமான இது கடந்த 2010ஆம் ஆண்டுமுதல் தற்போது வரை அதிகரிக்கும் மின் தேவை காரணமாக அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக விளங்குகிறது.
இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் மட்டும் 6,215 கோடி ரூபாய் நிதியை ஈட்டி உள்ளது. ஆண்டுக்காண்டு இந்த நிறுவனத்தின் வளர்ச்சி 46 சதவீதம் அதிகரித்து வருவதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது. சிஐஎல் நிறுவனத்தில் முதலீடு செய்ய பல முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்தியாவின் பங்குகளை வாங்க இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் குவிந்து வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|