பதிவு செய்த நாள்
26 மே2022
20:45
அதிகரிக்கும் போலியான மதிப்பீடுகள்
மின்னணு வர்த்தக தளங்களில், பொருட்கள் குறித்த போலியான மதிப்பீடுகள், விமர்சனங்கள் அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து, நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.இப்புகார்கள் குறித்து விசாரிக்க, இன்று மின்னணு வர்த்தக நிறுவனங்களுடனான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது, அமைச்சகம்.கட்டணங்களை உயர்த்திய ‘ஆக்சிஸ்’ ‘ஆக்சிஸ் வங்கி’ பல்வேறு கட்டணங்களை உயர்த்தி அறிவித்துள்ளது. ‘ஆட்டோ டெபிட்’டில் தவறுதல், கூடுதல் காசோலை புத்தகம், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காதது போன்றவற்றுக்கான கட்டணத்தை அதிகரித்து உள்ளது.இந்த கட்டண உயர்வுகள், ஜூன் முதல் தேதியிலிருந்து துவங்குகின்றன.
‘ஆம்பி’ திடீர் உத்தரவு
அனைத்து மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும், அவற்றின் அனைத்து ஊழியர்களையும், ஜூன் 10 முதல் அலுவலகத்துக்கு வந்து பணி செய்ய அழைக்குமாறு, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான ‘ஆம்பி’ தெரிவித்து உள்ளது. ‘ஆக்சிஸ் மியூச்சுவல் பண்டு’ நிறுவனத்தின் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, இந்த உத்தரவை ஆம்பி பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.எஸ்.பி.ஐ.,யின் வளர்ச்சி கணிப்பு கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதமாக இருக்கும் என எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.மேலும், கடந்த நிதியாண்டின் வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்து, அறிக்கை வெளியிட்டுள்ளது, எஸ்.பி.ஐ., வங்கியின் பொருளாதார குழு.சம்பளம் 71 கோடி ரூபாய்நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலில் பரேக்கின் ஊதியம், கடந்த நிதியாண்டில் 43 சதவீதம் அதிகரித்து, 71 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.இதற்கு முந்தைய ஆண்டில், 49.7 கோடி ரூபாயை, சலில் பரேக் ஊதியமாக பெற்றுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|