பாரத் பெட்ரோலியம் தனியார்மயமாக்கம்  தற்காலிகமாக கைவிட்டது மத்திய அரசுபாரத் பெட்ரோலியம் தனியார்மயமாக்கம் தற்காலிகமாக கைவிட்டது மத்திய அரசு ... 125 காப்புரிமைகள்: ‘டாடா’ விண்ணப்பம் 125 காப்புரிமைகள்: ‘டாடா’ விண்ணப்பம் ...
அதிகரித்து வரும் பணவீக்கம்; எச்சரிக்கை விடுத்த ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2022
21:11


மும்பை : நீடித்த, சீரான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு, வலுவான கட்டமைப்பு சீர்த்திருத்தங்கள் அவசியம் என, ரிசர்வ் வங்கி, அதன் ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.மேலும், நாட்டின் மொத்தவிலை பணவீக்க அதிகரிப்பு, சில்லரை விலை பணவீக்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க வாய்ப்பிருப்பதாகவும், ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்து உள்ளது.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:மூலப்பொருட்கள் விலை, போக்குவரத்து செலவுகள், வினியோகத்தில் ஏற்பட்டிருக்கும் தடைகள் ஆகியவற்றால் தயாரிப்பு செலவுகள் அதிகரித்து, நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளது.அரசாங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த, சமீபத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. மேலும் உருக்கு, பிளாஸ்டிக் தொழிலில் பயன்படுத்தப்படும் சில மூலப்பொருட்களின் இறக்குமதி வரியையும் தள்ளுபடி செய்தது.

அத்துடன், இரும்புத் தாது மற்றும் இரும்புத் துகள்கள் மீதான ஏற்றுமதியும் வரியையும் உயர்த்தி உள்ளது.கொரோனா கட்டுக்குள் வந்து, கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலிருந்து மீட்சி பெற்று வந்த நிலையில், புவிசார் நிலைமைகளால், வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.புவிசார் அரசியல் பிரச்னைகளில் விரைவான தீர்வு, கொரோனா மேலும் பரவாமல் இருப்பது ஆகியவை, பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.


பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதே நேரத்தில், வளர்ச்சியின் தேவைகளை நாம் மனதில் கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, நோயாளி இறந்துவிட்டது போல் அது இருந்துவிடக் கூடாது.

சக்திகாந்த தாஸ், கவர்னர், ரிசர்வ் வங்கி

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)