வர்த்தக துளிகள்வர்த்தக துளிகள் ... ஆயுத போட்டி வரக்கூடும்  ஆயுத போட்டி வரக்கூடும் ...
முதலில் காரை விற்க அனுமதி, பிறகே தயாரிப்பு; தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் எலான் மஸ்க்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2022
02:40


புதுடில்லி : ‘முதலில் ‘டெஸ்லா’ கார்களின் விற்பனை மற்றும் சேவைக்கு அனுமதித்தால் மட்டுமே, அதன்பின் இந்தியாவில் கார்களை தயாரிக்க முன்வருவோம்’ என, டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மேலும் அண்மைக் காலமாகவே டெஸ்லா கார்களை இறக்குமதி செய்வதற்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்து வருகிறார்.ஆனால் இந்திய அரசு, ‘முதலில் இந்தியாவில் கார்களை தயார் செய்யுங்கள்; அதன்பின் வரி சலுகை குறித்து பேசலாம்’ என கண்டிப்பாக இருக்கிறது. பிற வெளிநாட்டு நிறுவனங்கள், விதிகளுக்கு கட்டுப்பட்டு, இந்தியாவில் கார்களை தயாரித்து வரும்போது, டெஸ்லாவுக்காக பிரத்யேக சலுகை வழங்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது, மத்திய அரசு.இந்நிலையில்,



இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைப்பது குறித்த வாடிக்கையாளர் ஒருவரின் ‘டுவிட்டர்’ பதிவுக்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க், கார் விற்பனைக்கும் ,சேவைக்கும் முதலில் அனுமதி தராவிட்டால், நிறுவனம், இந்தியாவில் எந்த பகுதியிலும் ஆலையை அமைக்காது’ என பதில் அளித்துள்ளார்.அதாவது வரியை குறைக்கும்பட்சத்தில், முதலில் காரை இறக்குமதி செய்து விற்பனை செய்வது, அதன் பின் நிலைமையை பொறுத்து, இந்தியாவில் தயாரிப்பில் இறங்குவது என்பது அவரது நிலைப்பாடு. கடந்த மாதம், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, ‘இந்தியாவில் டெஸ்லா கார்களை தயாரிக்க ரெடியாக இருந்தால், எந்த பிரச்னையும் இல்லை.‘ஆனால், கண்டிப்பாக கார்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது’ என தெரிவித்திருந்தார்.


ஆனால், எலான் மஸ்க் உலகின் எந்த பெரிய நாடுகளைவிடவும், இந்தியாவில் இறக்குமதி வரி மிக அதிகமாக இருக்கிறது என்றும்; அதை குறைக்க வேண்டும் என்றும், தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்.இந்தியாவில் தற்போது, வெளிநாடுகளில் முழுக்க தயாரான 40 ஆயிரம் டாலருக்கு அதிகமான விலை கொண்ட கார்களுக்கு 100 சதவீதம் வரியும், அதற்கு குறைவான விலை கொண்ட கார்களுக்கு 60 சதவீதம் வரியும் விதிக்கப்படுகிறது. மொத்தத்தில் ‘விடாக்கண்டன், கொடாக்கண்டன்’ கதையாக போய்க்கொண்டிருக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)