பதிவு செய்த நாள்
31 மே2022
02:42
‘கிரிப்டோ’ ஆலோசனை தயார்
கிரிப்டோ கரன்சிகள் குறித்த ஆலோசனை அறிக்கை தயாராகி விட்டதாகவும், விரைவில் அது சமர்ப்பிக்கப்படும் என்றும், நிதித்துறை விவகார செயலர் அஜய் சேத் கூறியுள்ளார்.உள்நாடு மற்றும் வெளிநாட்டு பங்கேற்பாளர்களுடன் ஆலோசனைகள் மேற்கொண்டதாகவும், அவர் தெரிவித்து உள்ளார்.
முதலிடத்தில் எலான் மஸ்க்கடந்த 2021ம் ஆண்டில், மிக அதிகமாக ஊதியம் பெற்ற தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில், முதலிடத்தை ‘டெஸ்லா’ நிறுவனத்தின் எலான் மஸ்க் பிடித்து உள்ளார். ‘பார்ச்சூன் 500’ சி.இ.ஓ., பட்டியலில், இவரை அடுத்து, ‘ஆப்பிள்’ டிம் குக், ‘நெட்பிளிக்ஸ்’ ரீடு ஹாஸ்டிங்க்ஸ், ‘மைக்ரோசாப்ட்’ சத்ய நாதெள்ளா ஆகியோர் உள்ளனர்.இறக்குமதி வரியால் நஷ்டம்உருக்கு, ‘பிளாஸ்டிக்’ போன்ற பொருட்கள் மீதான இறக்குமதி வரியை மாற்றி அமைத்த வகையில், 10 – 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என அரசு தெரிவித்துள்ளது.மத்திய அரசு, கடந்த 22ம் தேதியிலிருந்து, பல்வேறு மூலப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை நீக்கி அறிவித்தது.
‘செய்ல்’ போலீஸில் புகார்உருக்குத் துறை நிறுவனமான ‘செய்ல்’ எனும், ‘ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா’, அதன் பெயரை தவறாகப் பயன்படுத்தி, போலியான இணைப்புகள், சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக, டெல்லி காவல் துறையில் புகார் செய்துள்ளது. இந்நிறுவனத்தின் பெயரில், போலியான குறுஞ்செய்திகளும், இணைப்புகளும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
கெய்ல் இந்தியா முதலீடு பொதுத்துறையை சேர்ந்த, ‘கெய்ல் இந்தியா’ நிறுவனம், மூன்று ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவில், 6 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய நிகர லாபம், கடந்த நிதியாண்டில், 112 சதவீதம் அதிகரித்து, 10 ஆயிரத்து, 364 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|