பதிவு செய்த நாள்
31 மே2022
02:47
புதுடில்லி : ‘வோடபோன் ஐடியா’ நிறுவனத்தில், ‘அமேசான்’ 20 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக செய்திகள் வந்ததை அடுத்து, இந்நிறுவன பங்கின் விலை, நேற்று, கிட்டத்தட்ட 5 சதவீதம் அதிகரித்தது.வோடபோன் ஐடியா நிறுவனம், தன்னுடைய கடன்களை தீர்ப்பதற்காக, முதலீட்டாளர்களை தேடிக்கொண்டிருக்கிறது.
மேலும், அரசின் உதவியுடன் திவால் நடவடிக்கையிலிருந்து தப்பிய நிலையில், மூலதனத்தை திரட்டி, அதன் நெட்வொர்க் வணிகத்தில் முதலீடு செய்ய விரும்பி, அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், அமேசான் நிறுவனம், வோடபோன் ஐடியாவில், கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யக்கூடும் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவின் ‘கிளவுடு’ சேவையில், தொலை தொடர்பு நிறுவனத்தின் கூட்டு இல்லாமல் இருக்கும் ஒரே நிறுவனமாக அமேசான் இருக்கிறது. இதே போல், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடு இல்லாமல் இருக்கும் ஒரே தொலைதொடர்பு நிறுவனமாகவும், வோடபோன் ஐடியா உள்ளது.‘கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட்’ போன்ற தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள், ‘ரிலையன்ஸ் ஜியோ’ மற்றும் ‘ஏர்டெல்’ ஆகியவற்றின் கிளவுடு வணிகத்தில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.இந்நிலையில், அமேசான் முதலீட்டை மேற்கொள்ளும்பட்சத்தில், வோடபோன் ஐடியா அதன் கடன்களை அடைப்பதற்கும்; ஜியோ, ஏர்டெல் ஆகியவற்றுடனான போட்டியை வலுப்படுத்தவும் வாய்ப்பு அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|