பதிவு செய்த நாள்
02 ஜூன்2022
21:30
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், நாட்டின் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
கோடைக்காலத்தை முன்னிட்டு, பலர் பயணங்களை மேற்கொண்டதை அடுத்து, நாட்டின் எரிபொருள் தேவை மே மாதத்தில் அதிகரித்து உள்ளது.நாட்டின் எரிபொருள் தேவையில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களே நிறைவேற்றுகின்றன.இந்நிறுவனங்களின், மே மாத பெட்ரோல் விற்பனை 28 லட்சம் டன் ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது, 55.7 சதவீதம் அதிகமாகும்.
இதேபோல், டீசல் விற்பனையும், கடந்த மே மாதத்தில் 68.2 லட்சம் டன் ஆக உயர்ந்துள்ளது. இது, 39.4 சதவீத உயர்வாகும்.பள்ளி, கல்லுாரி கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு மேற்கொள்ளும் பயணங்கள் மற்றும் கோடை வெப்பத்தை தவிர்க்க, குளிர்ச்சியான இடங்களை நோக்கி செல்வது, கொரோனா தடைகள் குறைந்தது போன்ற காரணங்களால், எரிபொருள் தேவை மே மாதத்தில் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|