பதிவு செய்த நாள்
02 ஜூன்2022
21:32
மும்பை:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 7.5 சதவீதமாக இருக்கும் என, எஸ்.பி.ஐ., அறிவித்துள்ளது. அத்துடன், முந்தைய கணிப்பிலிருந்து 20 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு உயர்த்தி, தற்போதைய கணிப்பை வெளியிட்டு உள்ளது.
பெருநிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபம் அதிகரித்து வருவது, வங்கி கடன் வளர்ச்சி, போதுமான பணப்புழக்கம் ஆகியவற்றின் காரணமாக, முந்தைய கணிப்பை விட 20 அடிப்படை புள்ளிகள் அதிரித்திருப்பதாக, எஸ்.பி.ஐ., தெரிவித்து உள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:பெரு நிறுவனங்களின் வளர்ச்சியை பொறுத்தவரை, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள, கிட்டத்தட்ட 2,000 நிறுவனங்களில், 29 சதவீத நிறுவனங்கள் முந்தைய ஆண்டை விட அதிகபட்ச வளர்ச்சியையும்; 52 சதவீத நிறுவனங்கள் அதிக நிகர லாபத்தையும் பதிவு செய்துள்ளன.
இதன் அடிப்படையில், நாட்டின் வளர்ச்சி குறித்த கணிப்பு உயர்த்தப்பட்டு உள்ளது.ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை, கொரோனா காலத்தில் இருந்த 4 சதவீதத்திலிருந்து, கூடுதலாக 1.25 – 1.50 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.5 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாக இருக்கும்.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|