நாட்டின் பொருளாதார வளர்ச்சிஉயர்த்தி அறிவித்த எஸ்.பி.ஐ.,நாட்டின் பொருளாதார வளர்ச்சிஉயர்த்தி அறிவித்த எஸ்.பி.ஐ., ... ஐந்தே ஆண்டுகளில் ஐந்தே ஆண்டுகளில் ...
பங்கு விலக்கல் நடவடிக்கைஇலக்கை எட்ட அரசு தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2022
21:38

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், பங்கு விலக்கல் நடவடிக்கைகள் வாயிலாக, 65 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த இலக்கை எட்டும் முயற்சியில், மூன்று முக்கிய நிறுவனங்களை, வரும் மார்ச் மாதத்துக்குள் தனியார்மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்து, நிதியமைச்சகத்தைச் சேர்ந்த முக்கியமான அதிகாரி ஒருவர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டுக்குள் எப்படியும், ‘ஐ.டி.பி.ஐ., வங்கி, பி.இ.எம்.எல்., ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ ஆகிய மூன்று நிறுவனங்களையும் தனியார்மயமாக்கிவிட அரசு முயற்சித்து வருகிறது.
அதுமட்டுமின்றி, ‘கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் ஜிங்க்’ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.முந்தைய நிதியாண்டு பங்கு விலக்கல் இலக்கான 78 ஆயிரம் கோடி ரூபாயை விட, நடப்பு ஆண்டு இலக்கு 18 சதவீதம் குறைவாகவே, அதாவது, 65 ஆயிரம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.கடந்த நிதியாண்டில், எல்.ஐ.சி., பங்கு வெளியீடு தள்ளிப் போனதால் இலக்கை எட்ட முடியாமல் போனது.
ஆனால், நடப்பு நிதியாண்டில், எல்.ஐ.சி., மற்றும் ஓ.என்.ஜி.சி., பங்கு விற்பனை வாயிலாக 23 ஆயிரத்து 574 கோடி ரூபாய் திரட்டப்பட்டு உள்ளது.இருப்பினும், புவிசார் அரசியல் நிலைமைகள் காரணமாக, தற்போது பங்குச் சந்தை சூழல் சாதகமாக இல்லை. எனவே, பல ஏலதாரர்கள் கூடுதல் அவகாசம் கேட்கின்றனர்.எது எப்படி இருப்பினும், நடப்பு ஆண்டில் இலக்கை எட்டிவிட முடியும் என நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)