பதிவு செய்த நாள்
02 ஜூன்2022
21:44
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 1.8 சதவீதம் அதிகரித்து உள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், எச்.பி.ஐ., 1.8 சதவீதம் அதிகரித்திருந்த போதிலும்; அதற்கு முந்தைய டிசம்பர் காலாண்டில், 2.7 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.நாட்டில் உள்ள முக்கியமான 10 நகரங்களில் உள்ள பதிவு அலுவலக பரிவர்த்தனை தரவுகளின் அடிப்படையில், எச்.பி.ஐ., எவ்வளவு மாற்றம் கண்டுள்ளது என்பதை, ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கிட்டு அறிவித்து வருகிறது, ரிசர்வ் வங்கி.
இதன்படி, சென்னை, கோல்கட்டா, கான்பூர் ஆகிய நகரங்களில், எச்.பி.ஐ., முந்தைய காலாண்டை விட, அதிகரித்துள்ளது. மற்ற நகரங்களில் சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக, பெங்களூரில் முந்தைய காலாண்டைவிட, 11.1 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|