பதிவு செய்த நாள்
02 ஜூன்2022
21:52
புதிய ஏல அறிவிப்பு
‘சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவன பங்கு விலக்கலுக்காக, புதிய ஏல அறிவிப்பை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது.இந்நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்துஇருந்த இரு நிறுவனங்களும், ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பது உள்ளிட்ட புகார்கள் எழுந்திருப்பதை அடுத்து, அரசு புதிய ஏல முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
‘பேட்டா’ பங்குகள் விற்பனை
‘பேட்டா இந்தியா’ நிறுவனத்தின் புரமோட்டரான பேட்டா (பிஎன்) பி.வி., நிறுவனம், தன் வசம் இருந்த 2.56 சதவீத பேட்டா பங்குகளை, 613 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.மிக குறைந்த அளவிலான பங்குகளே விற்கப்பட்டு இருப்பதால், நிர்வாகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என, பேட்டா இந்தியா நிறுவனத்தின் சி.இ.ஓ., குஞ்சன் ஷா கூறியுள்ளார்.
முன் அனுமதி தேவையில்லை
மருத்துவ காப்பீடு மற்றும் பொது காப்பீடுகளுக்கான புதிய திட்டங்களுக்கு, முன் அனுமதி பெறத் தேவையில்லை என, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தெரிவித்து உள்ளது.காப்பீட்டு துறையில் எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்தும் வகையில், இனி இத்தகைய திட்டங்களுக்கான முன் அனுமதியை பெற வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பணப் பட்டுவாடாவில் சாதனை
என்.பி.சி.ஐ., எனும் ‘தேசிய பணப்பட்டுவாடா கழகம்’ அறிமுகம் செய்துள்ள, யு.பி.ஐ., தளத்தின் வாயிலாக, கடந்த மே மாதத்தில், சாதனை அளவாக, 10 லட்சம் கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.595 கோடி பரிவர்த்தனைகள் வாயிலாக, இந்த 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணப்பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.
மின்சார வாகன விற்பனை
‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், கடந்த மே மாதத்தில், இதுவரை இல்லாத வகையில் 3,454 மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது.கடந்த ஆண்டு மே மாதத்தில், 476 மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மே மாதம், விற்பனை 626 சதவீதம் அதிகரித்துஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|