பதிவு செய்த நாள்
03 ஜூன்2022
18:29
வட ஆசியா, மத்திய அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் எங்கள் நிறுவனத்தை வளர்க்க திட்டமிட்டுள்ளோம்; எங்களது முழு கவனம் ஆர்கானிக் வளர்ச்சியில் உள்ளது, என்று எச்சிஎல் டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரிய சவால்கள் இருந்தபோதிலும் தொழில்நுட்பத்திற்கான தேவைச் சூழல் தொடர்ந்து வலுவாக உள்ளது. மேலும் உலகளாவிய வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் மாற்றத்தை செயல்திறனுடன் துரிதப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். வட ஆசியா, மத்திய அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா ஆகியவை நிறுவனத்திற்கான புதிய புவியியல் ஆகும். எதிர்காலத்தில் இந்த நாடுகளில் எங்கள் நிறுவனத்தை வளர்க்க திட்டமிட்டுள்ளோம். எங்கள் நிறுவனத்தின் தற்போதைய புவியியல் மற்றும் சந்தைகளுடன் கூடுதலாக எதிர்காலத்தில் இந்த நாடுகளில் நாங்கள் வளர திட்டமிட்டுள்ளோம். கடந்த இரண்டு வருடங்கள் கணிக்க முடியாதவையாகவும், சவாலானதாகவும் இருந்தது. ஆனால் இதற்கான தேவை சூழல் தொடர்ந்து வலுவாக உள்ளது, என்றார்.
அவர் மேலும் கூறுகையில், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல்வேறு வாடிக்கையாளர்களுடனான தனது தொடர்புகளை மேற்கோள்காட்டி, டிஜிட்டல் உருமாற்ற திட்டங்களை செயல்திறனுடன் விரைவுபடுத்துவதே தங்களின் முன்னுரிமை ஆகும். பெரும்பாலான நிறுவனங்களின் நிலையான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியானது இயல்பாகவே வந்துள்ளது. அதில் தான் ஐடி சேவை வழங்குனர்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறார்கள். கையகப்படுத்துதல்கள், பிரத்யேக கையகப்படுத்துதல்கள் ஆகியவை எங்களுக்கு சில டொமைன் நிபுணத்துவத்தை வழங்குகின்றன மற்றும் பல்வேறு வணிகத் துறைகளில் ஒரு குறிப்பிட்ட வலிமையை நாங்கள் கொண்டுள்ளோம், ஆனால் எங்களது முழு கவனம் ஆர்கானிக் வளர்ச்சியில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாங்கள் தொடர்ந்து அதில் கவனம் செலுத்துகிறோம், இனியும் தொடர்ந்து செய்வோம், என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|