பதிவு செய்த நாள்
03 ஜூன்2022
19:40
புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறையின் செயல்பாடு, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிக வலுவான வளர்ச்சியை பெற்றுள்ளது.
‘எஸ் அண்டு பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ்’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஹோட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
கடந்த மே மாதத்தில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 58.9 புள்ளிகளாக உயர்வை கண்டுள்ளது. இது, ஏப்ரலில், 57.9 புள்ளிகளாக இருந்தது. எஸ்.பி.எம்.ஐ., குறியீடு 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், அது சரிவைக் குறிக்கும்.அந்த வகையில், மே மாதம் வலுவான வளர்ச்சி காணப்பட்டுள்ளது.
இதற்கு தேவைகள் அதிகரித்ததும், புதிய வேலைகள் வந்ததும் காரணமாக அமைந்தது. கடந்த 10 மாதங்களாக சேவைகள் துறையின் செயல்பாடு தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.இந்திய பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து வருவது, சேவைகள் துறையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|