பதிவு செய்த நாள்
03 ஜூன்2022
19:46
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, மே மாதத்தில், கடந்த 15 மாதங்களில் இல்லாத வகையில், மெதுவான வளர்ச்சியை கண்டுள்ளது. மேலும் வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:கடந்த மே மாதத்தில், ஏற்றுமதி 15.46 சதவீதம் அதிகரித்து, 2.87 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றுள்ளது. கடந்த 15 மாதங்களில் இது மிக மெதுவான வளர்ச்சியாகும். இதற்கு முன், 2021 பிப்ரவரியில் வளர்ச்சி 0.67 சதவீதமாக மிகக் குறைவாக இருந்தது.
அதன் பிறகு இப்போது குறைவாக உள்ளது.இறக்குமதியை பொறுத்தவரை 56.14 சதவீதம் அதிகரித்து, 4.67 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதையடுத்து, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 1.80 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த மே மாதத்தில் பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி 91.6 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கத்தின் இறக்குமதியும், மே மாதத்தில் அதிகரித்து, 44 ஆயிரத்து 814 கோடி ரூபாயாக உள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வர்த்தக பற்றாக்குறை அதிகரித்ததற்கு முக்கிய காரணம், தங்கத்தின் இறக்குமதி அதிகரித்தது தான். இருப்பினும் இது நகைகள் ஏற்றுமதி அதிகரிக்க உதவுவதாக இருக்கும் என்கின்றனர், நிபுணர்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|