பதிவு செய்த நாள்
03 ஜூன்2022
20:26
புதுடில்லி:மேற்கு உலக நாடுகளின் பல நிறுவனங்கள், ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து வெளியேறி வருவதை அடுத்து, அந்நாட்டின் வணிக வளாகங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன; ‘மால்’களில் பாதி காலியாக உள்ளன.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, மேற்கு நாடுகள் ரஷ்யாவின் மீது தடை விதித்து வருகின்றன.
இதனால் பல பிரபல நிறுவனங்கள், தங்கள் ரஷ்ய வணிகத்தை நிறுத்திக் கொள்ள துவங்கி உள்ளன.பல சில்லரை விற்பனை நிறுவனங்கள், ரஷ்ய வணிகத்திலிருந்து வெளியேறி வருகின்றன.உக்ரைன் மீதான போர் துவங்கி 15 வாரங்களை தாண்டிவிட்ட நிலையில், ரஷ்யர்களின் அன்றாட வாழ்க்கை வழக்கம் போலவே நடக்கிறது.
பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இருந்தது போன்ற பதற்றமோ அல்லது ஏ.டி.எம்., முன்பாக நிற்கும் பெருங்கூட்டமோ இப்போது இல்லை.ஆனாலும், சில மாற்றங்கள் பளிச்சென்று தெரிகின்றன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ரஷ்யாவின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்ட பல பிராண்டுகள், அங்கிருந்து வெளியேறுகின்றன.
இதையடுத்து, மால்களில் பாதி கடைகள் காலியாக உள்ளன. காப்பி, துரித உணவுகள், ஆடைகள், ஆடம்பர பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றில் கோலோச்சிய பல நிறுவனங்களின் சுவடுகள் மட்டுமே இப்போது அங்கு உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|