பதிவு செய்த நாள்
12 ஜூன்2022
19:27
ஆயுள் காப்பீடு நிறுவனங்கள்
புதிய காப்பீடு திட்டங்களை, ஆணையத்தின் முன் அனுமதி பெறாமல் அறிமுகம்
செய்ய, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வழி
செய்துள்ளது.
தற்போது ஆயுள் காப்பீடு திட்டங்கள், புதிய பாலிசிகள்,
ரைடர்களை காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதி பெற்று அறிமுகம்
செய்ய வேண்டும். எனினும், சிறிய மாற்றங்களை ‘யூஸ் அண்ட் பைல்’ முறையில்
மேற்கொள்ளலாம். இதன் மூலம் புதிய காப்பீடு திட்டங்கள் அறிமுகமாவது மேலும்
எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆயுள் காப்பீடு
நிறுவனங்கள், தனிநபர் சேமிப்பு, பென்ஷன், ஆண்டளிப்பு திட்டங்கள் தவிர, மற்ற
பிரிவுகளில் புதிய திட்டங்களை ஆணையத்தின் முன் அனுமதி பெறாமல் அறிமுகம்
செய்ய வழி செய்யும் சுற்றறிக்கையை, காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் அண்மையில்
வெளியிட்டுள்ளது.
காப்பீடு துறையில் வேகமாக ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு
ஈடு கொடுக்கும் வகையில் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே,
மருத்துவ காப்பீடு மற்றும் பொது காப்பீடு துறையில் சில பிரிவுகளில்
இத்தகைய அனுமதியை ஆணையம் வழங்கியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|