பதிவு செய்த நாள்
14 ஜூன்2022
06:50
ரயில்வே வாயிலாக வினியோகம்
‘மாருதி சுசூகி’ நிறுவனம், கடந்த நிதியாண்டில், ரயில்வே வாயிலாக கிட்டத்தட்ட 2.33 லட்சம் வாகனங்களை முகவர்களுக்கு வினியோகம் செய்துள்ளது. ஒரு முழு நிதியாண்டில், இதுவரை இவ்வளவு வாகனங்களை ரயில்வே வாயிலாக அனுப்பியதில்லை என, மாருதி தெரிவித்துள்ளது.
ரூபாய் மதிப்பு சரிவுஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில் 78.13 ரூபாயாக சரிவைக் கண்டது.தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேறுவது, பலகீனமான ஆசிய கரன்சிகள், பங்கு சந்தைகளின் ஊசலாட்டம் உள்ளிட்டவற்றின் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
மியூச்சுவல் பண்டு முதலீடுரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்ததை அடுத்து, கடன் சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களிலிருந்து, கடந்த மே மாதத்தில், 32 ஆயிரத்து, 722 கோடி ரூபாய் வெளியே எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முந்தைய மாதமான ஏப்ரலில், 54 ஆயிரத்து, 656 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டிருந்தது.
நாட்டின் முதல் ஆலைதங்க ஆபரணத் துறையை சேர்ந்த ‘ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனம், நாட்டின் முதலாவது ‘டிஸ்ப்ளே’ தயாரிக்கும் தொழிற்சாலையை, தெலுங்கானாவில் துவங்க உள்ளது. இதற்காக, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 3 பில்லியன் டாலர் அதாவது, 23 ஆயிரத்து, 400 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
வெளியேறும் அன்னிய முதலீட்டாளர்கள்கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், அன்னிய முதலீட்டாளர்கள், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை வெளியே எடுத்துள்ளனர். நிதி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளிலிருந்து அதிக அளவில் முதலீடுகள் வெளியேறி உள்ளன. தகவல் தொழில்நுட்ப துறையிலிருந்து மட்டும், 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாயை, அன்னிய முதலீட்டாளர்கள் வெளியே எடுத்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|