பதிவு செய்த நாள்
14 மே2022
19:37
‘இ -– முத்ரா’ பங்கு வெளியீடு
டிஜிட்டல் கையெழுத்து சான்றிதழ்களை வழங்கும் ‘இ – முத்ரா’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 20ம் தேதி துவங்கி, 24ம் தேதியன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டில், டிஜிட்டல் சான்றிதழ் வழங்கும் பிரிவில், 37.9 சதவீத பங்களிப்புடன் முன்னிலை வகித்து வருகிறது, இ -– முத்ரா நிறுவனம்.
அன்னிய செலாவணி இருப்பு
கடந்த 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 13 ஆயிரத்து, 629 கோடி ரூபாய் குறைந்து, 45.89 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.ஆனால், தங்கத்தின் இருப்பு மதிப்பு 1,040 கோடி ரூபாய் அதிகரித்து, 3.21 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
‘வேறு மலைகள் உள்ளன’
‘கடந்த 26 ஆண்டு காலம் இருந்த இடத்தை விட்டு வெளியே செல்வது எளிதல்ல. இருப்பினும், ஏறுவதற்கு வேறு மலைகள் உள்ளன’ என கேம்ப்பெல் வில்சன் கூறியுள்ளார்.
‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் வில்சன், தற்போது பணியாற்றி வரும், ‘ஸ்கூட்’ நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரீமியம் வருவாய் அதிகரிப்பு
பொது காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த பிரீமியம் வருவாய், கடந்த ஏப்ரல் மாதத்தில், 24 சதவீதம் அதிகரித்து, 21 ஆயிரத்து, 327 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதுவே, கடந்த ஆண்டு ஏப்ரலில், மொத்த பிரீமியம் வருவாய் 17 ஆயிரத்து, 251 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது.
ரூ.450 கோடி நிதி திரண்டது
‘பிரதீப் பாஸ்பேட்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு முன்பாக, நிறுவன முதலீட்டாளர்கள் வாயிலாக, 450 கோடி ரூபாயை திரட்டி உள்ளது.இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 17ம் தேதியன்று துவங்கி, 19ம் தேதியுடன் முடிவடைகிறது. பங்கின் விலை 39 -– 42 ரூபாய்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|