பதிவு செய்த நாள்
19 ஜூன்2012
00:41
புதுடில்லி:நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் சில்லரை பணவீக்கம், சென்ற மே மாதத்தில், 10.36 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில், 10.26 சதவீதமாக இருந்தது. இது, தற்காலிக மதிப்பீட்டில், 10.32 சதவீதம் என்றளவில் மதிப்பிடப்பட்டிருந்தது. மதிப்பீட்டு மாதத்தில், சமையல் எண்ணெய், காய்கறிகள், பால் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து காணப்பட்டதே இதற்கு முக்கிய கார ணம்.சென்ற மே மாதத்தில், ஆண்டுக்கணக்கில் காய்கறிகளின் விலை மிக அதிகளவாக, 26.59 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது தவிர, சமையல் எண்ணெய் 18.21 சதவீதமும், பால் மற்றும் பால் பொருட்கள் 13.74 சதவீதமும் உயர்ந்துள்ளது.மேலும், மீன்,முட்டை,இறைச்சி, 10.50 சதவீதமும், ஆல்கஹால் கலக்காத பானங்கள் 9.44 சதவீதமும் உயர்ந்துள்ளது. உணவு தானியங்கள் (4.79 சதவீதம்), சர்க்கரை (5.38 சதவீதம்), பருப்பு வகைகள் (7.89 சதவீதம்), ஆகியவற்றின் விலையும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.எரிபொருள் விலை, அணிகலன்கள், படுக்கைகள் மற்றும் காலணிகள் உள்ளிட்டவற்றிற்கான பணவீக்கம், இரட்டை இலக்கம் என்ற அளவிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|