தங்கம் விலை சவரன் 23000த்தை நெருங்குகிறதுதங்கம் விலை சவரன் 23000த்தை நெருங்குகிறது ... சென்செக்ஸ் 154 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் சென்செக்ஸ் 154 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
ரூ.2.75 லட்சம் பைக் இந்தியாவில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
15:03

இந்தியாவில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு ஸ்போர்ட்ஸ் பைக்கள் விற்பனை தற்போது பிரபலமாகி வருகிறது. அந்த வகையில், கவாசாக்கி நின்ஜா 250 ஆர், ஹோண்டா சிபிஆர் 250ஆர் போன்ற பைக்குகள் விற்பனையில் உள்ளன. தற்போது, டி.எஸ்.கே., மோட்டோவீல்ஸ்- ஹயோசங்க் நிறுவனம், புதிய பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை மையாக கொண்டு செயல்படும் கார்வாரே மோட்டார்ஸ் நிறுவனம், சில மாதங்களுக்கு முன், கொரிய நாட்டை சேர்ந்த எஸ் அண்டு டி மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் ஹயோசங்க் பைக்கை அறிமுகப்படுத்த முடிவு செய்தது. எனினும், கார்வாரே மோட்டார்ஸ் நிறுவன பங்குகளை, டி.எஸ்.கே., என்ற கட்டுமான நிறுவனம் வாங்கியுள்ளதால், இந்த நிறுவனம், டி.எஸ்.கே., மோட்டோவீல்ஸ் -ஹயோசங்க் நிறுவனமாக உருமாறியுள்ளது. இந்த நிறுவனம் தான், இந்த புதிய பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.2.75 லட்சம். இதில், வி -ட்வின் ஃபோர் ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க சக்கரத்தில் இரண்டு டிஸ்க் பிரேக்குகள், பின்பக்க சக்கரத்தில் ஒரு டிஸ்க் பிரேக் இடம் பெற்றுள்ளது. இந்த பைக்கின் எடை 188 கிலோ. வெளிநாட்டில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, புனே அருகே வாய் என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையில், இந்த பைக் உருவாக்கப்படுவதால், விலை அதிகமாக உள்ளது. உள்நாட்டிலேயே உதிரிபாகங்களை பெற்று தயாரித்தால், எதிர்காலத்தில் விலை குறைய வாய்ப்பு உண்டு.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)