பதிவு செய்த நாள்
12 ஜூலை2013
00:33
மும்பை:ரிசர்வ் வங்கி, "செபி' ஆகியவை, அன்னியச் செலாவணி சந்தையில் விதித்த கட்டுப்பாடுகளால், கடந்த மூன்று நாட்களாக, ரூபாய்மதிப்பு பெரிய அளவில் வீழ்ச்சி காண்பது தடுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, "செபி'யின் உத்தரவு, நேற்று அமலுக்கு வந்ததை அடுத்து, பங்குத் தரகு நிறுவனங்கள், அவற்றின் அன்னியச் செலாவணி முன்பேர ஒப்பந்த வரம்பை குறைத்துக் கொண்டன.இதனால், ஊக வணிகம் கட்டுப்படுத்தப்பட்டு, ரூபாய்மதிப்பின் சரிவு, ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது எனலாம். நேற்று முன்தினம் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 59.66 ஆக இருந்தது.இந்நிலையில், நேற்று நடைபெற்ற அன்னிய செலாவணி வர்த்தகத்தில், ரூபாய்மதிப்பு, வர்த்தகத்தின் இறுதியில், முன்தினத்தை (59.66) விட, 0.02 காசு குறைந்து, 59.68 ல் நிலை பெற்றது.ரூபாய்மதிப்பு, கடந்த, 8ம் தேதி திங்களன்று, வரலாறு காணாத வகையில், 61.21 ஆக சரிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|