காரில் விளம்பரம்: உரிமையாளருக்கு வருவாய்:மூன்று ஆண்டுகளுக்கு தவணை தொகை செலுத்த வேண்டாம்காரில் விளம்பரம்: உரிமையாளருக்கு வருவாய்:மூன்று ஆண்டுகளுக்கு தவணை தொகை ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 சரிவு ...
ரப்பர் விலை: உள்நாட்டில் உயர்வு, வெளிநாட்டில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2013
00:40

சர்வதேச சந்தைகளில், இயற்கை ரப்பர் விலை சரிவடைந்து வரும் நிலையில், இந்தியாவில், அதன் விலை உயர்ந்து வருகிறது.ரப்பர் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள கேரளாவில், கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், உள்நாட்டு சந்தையில் ரப்பர் வரத்து குறைந்து, அதன் விலை உயர்ந்து வருகிறது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜூன் மாதம், ஒரு கிலோ, ஆர்.எஸ்.எஸ்-4 ரக இயற்கை ரப்பரின் விலை, 177 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 192 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த விலையில் கூட, சந்தைகளில் ரப்பர் ஷீட்டுகள் கிடைப்பது கடின மாக உள்ளதாக, அவர்கள் மேலும் கூறினர்.அதே சமயம், இதே காலத்தில், பாங்காக் சந்தையில், ஒரு கிலோ இயற்கை ரப்பர் விலை, 168 லிருந்து, 155 ரூபாயாக குறைந்துள்ளது.
கேரளாவில், வழக்கமான மழைப் பொழிவில், கிட்டத்தட்ட 75 சதவீதம், கடந்த மூன்று வாரங்களில் பெய்து விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் காணப்படாத மழையால், ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.சென்ற ஜூன் மாதம், நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி, 64 ஆயிரம் டன்னாக இருக்கும் என, ரப்பர் வாரியம் மதிப்பிட்டிருந்தது. ஆனால், 35,000 - 40,000 டன் என்ற அளவிற்கே இயற்கை ரப்பர் உற்பத்தியானது.
சென்ற, 2012ம் ஆண்டு ஜூன் மாதம், 62 ஆயிரம் டன் இயற்கை ரப்பர் உற்பத்தி செய்யப் பட்டது.கடந்த ஆண்டு, ஒரு கிலோ ரப்பர் விலை, 200 ரூபாயை தாண்டியதை அடுத்து, அது சார்ந்த பொருட்களை தயாரிக்கும், 500க்கும் மேற்பட்ட, சிறிய மற்றும் நடுத்தர ரப்பர் நிறுவனங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்தால், இயற்கை ரப்பர் விலை மேலும் உயர்ந்து, அது சார்ந்த நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதை தவிர்க்க, ரப்பர் இறக்குமதி தான் ஒரே தீர்வு என, மோட்டார் வாகன டயர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (அட்மா) தெரிவித்து உள்ளது. கிட்டத்தட்ட கிலோவுக்கு, 40 ரூபாய் வித்தியாசம் இருப்பதால், இயற்கை ரப்பர் இறக்குமதி தான் லாபகரமானது என, இத்துறை சார்ந்தவர் களும் தெரிவித்துள்ளனர்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)