பதிவு செய்த நாள்
14 ஜூலை2013
01:32
குன்னூர்:வர்த்தகர்கள் பங்களிப்பு குறைந்ததால், குன்னூரில் தேயிலை தூள் விற்பனை மந்தமானது. விலையும் சரிந்ததால், உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின், 27வது தேயிலை ஏலம் நடைபெற்றது
வெளிநாட்டு வர்த்தகர்கள்:மொத்தம், 20.27 லட்சம் கிலோ தேயிலை விற்பனைக்கு வந்தது. இதில்,14.78 லட்சம் கிலோ இலை ரகமும்,5.49 லட்சம் கிலோ டஸ்ட் ரகமும் அடங்கும். உள்நாடுமற்றும் வெளிநாட்டு வர்த்தகர்களின் பங்களிப்பு குறைந்ததால், மொத்தமுள்ள, 20.27 லட்சம் கிலோவில், 68 சதவீத தேயிலை தூள் மட்டுமே விற்பனையானது. 32 சதவீத தேயிலை தூள் தேக்கம்அடைந்தது.
அனைத்து ரகங்களுக்கும் கிலோவுக்கு, 1 ரூபாய் கூடுதல் விலை கிடைத்தது.இலை ரகம் சராசரியாக கிலோவுக்கு 70முதல்75 ரூபாய் வரையிலும், உயர் ரகம்,110 ரூபாய் முதல்150 ரூபாய் வரையும், டஸ்ட் ரகத்தில் சாதாரண வகை, 75 ரூபாய் முதல் 85 ரூபாய் வரையும், உயர் வகைக்கு 120 ரூபாய் முதல் 160 ரூபாய் வரையும் விலை கிடைத்தது.
சி.டி.சி., ரகம், அதிகபட்சமாக ஒரு கிலோ,127 ரூபாய்க்கும், டஸ்ட் ரகம், அதிகபட்சம், 268 ரூபாய்க்கும் விற்பனை யானது.அடுத்த ஏலத்துக்கு மொத்தம், 20.40 லட்சம் கிலோ தேயிலை விற்பனைக்கு தயாராக உள்ளது.கடந்த வாரம் மொத்தம்14.84 லட்சம் கிலோ தேயிலை விற்பனையாகி,அதன் மூலம்,13.66 கோடி ரூபாய் வருவாய் கிடைத் தது. ஒரே வாரத்தில்,1.54 கோடி ரூபாய் வருவாய் குறைந்துள்ளது. சராசரியாக கிலோவுக்கு,91.25 ரூபாய் கிடைத் தது. இதுவே, இந்தாண்டின் குறைந்தபட்ச விலையாகும்.
பங்களிப்பு:இதே போல, அரசு கூட்டுறவு தேயிலை ஏல மையத்திலும் விற்பனை குறைந்தது. விற்பனைக்கு வந்த 3.96 லட்சம் கிலோவில், 70 சதவீத தேயிலை தூள் மட்டுமே விற்பனையானது.ஏலங்களில், வர்த்தகர்களின் பங்களிப்பு குறைந்த தால் விற்பனையும் குறைந்தது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|