பதிவு செய்த நாள்
15 ஜூலை2013
01:26
புதுடில்லி:சென்ற ஜூன் மாதத்தில், நிறுவனங்கள், தனியார் கடன் பத்திர ஒதுக்கீடுகள் வாயிலாக, 35,214 கோடி ரூபாயை திரட்டியுள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி' வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிறுவனங்கள், அவற்றிற்கு @தவையான நிதியை, நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்களுக்கு, கடன் பத்திரங்களை ஒதுக்கீடு செய்து, பெற்று கொள்கின்றன.
இவ்வகையில், இவ்வாண்டு மே மாதத்தில், நிறுவனங்கள் திரட்டிய தொகை, 33,759 @காடி ரூபாயாக இருந்தது. இது, இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில், 41,812 கோடி ரூபாயாக மிகவும் அதிகரித்திருந்தது.
இந்திய நிறுவனங்கள், கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதத்தில், 202 கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 57,745 @காடி ரூபாயை திரட்டி கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பாண்டு, ஜூன் மாதத்தில், 222 கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, நிதி திரட்டி கொள்ளப்பட்டது. இந்த எண்ணிக்கை, சென்ற மே மாதத்தில், 236 ஆக இருந்தது.டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு சரிவடைந்து வருவது மற்றும் கடன் பத்திர வெளியீடுகளுக்கான நெறிமுறைகள் குறைவாக இருப்பது போன்றவற்றால், நிறுவனங்கள், இப்பிரிவின் கீழ் நிதி ஆதாரத்தை திரட்டி கொள்ளவதை மிகவும் விரும்புகின்றன.
நடப்பு 2013ம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள், கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 2.08 லட்சம் கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன.இது, கடந்த 2012ம் ஆண்டின் இதேஆறு மாத காலத்தில், 1.46 லட்சம் @காடி ரூபாயாக இருந்தது என, "செபி' அமைப்பின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|