பதிவு செய்த நாள்
16 ஜூலை2013
05:15
புதுடில்லி:ரிசர்வ் வங்கி, தனியார் மற்றும் பொதுத் துறையைச் சேர்ந்த, 22 வங்கிகளுக்கு 49.50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.விதிமுறைகள்:"உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்' (கே.ஒய்.சி.,) மற்றும் பண பரிமாற்ற நடவடிக்கைகளில் விதிமுறைகளை மீறியது, போன்றவற்றிற்காக, ரிசர்வ் வங்கி, 22 வங்கிகளுக்கு, 49.50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.மேற்கண்ட மொத்த வங்கிகளுள், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.), பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மற்றும் பெடரல் பேங்க் ஆகிய வங்கிகளுக்கு நடப்பு, 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, லட்சுமி விலாஸ் பேங்க். பஞ்சாப் நேஷனல் பேங்க், ஜம்மு ஆண்டு காஷ்மீர் பேங்க், ஆந்திரா பேங்க் ஆகிய வங்கிகளுக்கு, தலா, 2.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இவை தவிர, யெஸ் பேங்க், விஜயா பேங்க், ஒரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், தனலட்சுமி பேங்க், ஐ.என்.ஜி., வைஸ்யா பேங்க், கோட்டக் மகிந்திரா பேங்க், ரத்னாகர் பேங்க் ஆகிய வங்கிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க்ரிசர்வ் வங்கி, இதற்கு முன்பாக, கோப்ராபோஸ்ட் என்ற இணைய தள நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், ஒட்டுமொத்த அளவில், ஆக்ஸிஸ் பேங்க், எச்.டி.எப்.சி. பேங்க் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் ஆகிய மூன்று வங்கிகளுக்கு, 10.50 கோடி ரூபாய் அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|