பதிவு செய்த நாள்
31 ஜூலை2013
03:25
புதுடில்லி:மருந்து துறையில், அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளும் வகையில், ஆறு திட்டங்களுக்கு, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்.ஐ.பி.பீ.,) அனுமதி அளித்துள்ளது. மேற்கண்ட ஆறு திட்டங்களுக்கான மொத்த மதிப்பு, 855 கோடி ரூபாயாகும்.இதில், சிங்கப்பூரைச் சேர்ந்த பிரிசினஸ் கபி மருந்து நிறுவனத்தின், 349 கோடி ரூபாய் முதலீட்டு திட்டமும் அடங்கும். இது தவிர, லோட்டஸ் சர்ஜிக்கல் ஸ்பெஷாலிட்டிஸ் (150 கோடி ரூபாய் முதலீடு), கேலிக்ஸ் கெமிக்கல் அண்டு பார்ம‹ட்டிக்கல்ஸ் (200 கோடி ), சுமித் அண்டு நெப்யூ (142 கோடி), ஆந்திராவைச் சேர்ந்த சிலோன் லேபரட்டரீஸ் (12.25 கோடி) மற்றும் ஐதராபாத்தைச் சேர்ந்த குளோபியன் இந்தியா (1.17 கோடி ரூபாய் முதலீடு) ஆகிய நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு எப்.ஐ.பி.பீ., அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|