பதிவு செய்த நாள்
07 செப்2013
00:20
மும்பை:நாட்டில் சில்லரை நாணயங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், வியாபாரிகளும், பொதுமக்களும் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர்.முன்பு, ரிசர்வ் வங்கி, ரூபாய்க்கு மாற்றாக சில்லரை நாணயங்களை வழங்கி வந்தது.
ரிசர்வ் வங்கி:இப்பணி, தற்போது வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. வங்கிகள், சிறப்பு பிரிவு அமைத்து, சில் லரை நாணயங்களை வழங்குமாறு ரிசர்வ் வங்கி உத்தர விட்டுள்ளது.ஆனால், பல வங்கிகள் இதனை பின்பற்றாமல் உள்ளன. இதற்கு வங்கி அலுவலர்களின் வேலைப் பளு காரணமாக கூறப்படுகிறது.
ஒரு சில வங்கிக்கிளைகளில் பணியாற்றும் அலுவலர்களே, வியாபாரிகளுடன் கை கோர்த்து, மொத்தமாக சில்லரை நாணயங்களை வழங்கி விடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.முன்பு,சில ஏஜெண்டுகள், 3-5 சதவீதம் கமிஷனில் சில்லரை நாணயங்களை வழங்கி வந்தனர். இது, தற்போது 18 சதவீதம் வரை உயர்ந்து விட்டது.
வியாபாரிகள், சில்லரை தட்டுப்பாடு காரணமாக, பொருட்களின் விற்பனையை இழக்க விரும்பாமல், கூடுதல் விலை யில் சில்லரை நாணயங்களை வாங்கி வருகின்றனர். பிச்சைக்காரர்களும் கமிஷன் அடிப்படையில்,சில்லரை நாணயங்களை வழங்குகின்றனர். சில்லரை நாணயங்களின் பற்றாக்குறையை போக்க, கூடுதலாக நாணயங்கள் வெளி யிடப்படும் என, மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தது.
ஆனால்,அதன்படி வெளியிடப்படவில்லை. இதுவும் சில்லரை நாணயங்களின் பற்றாக்குறைக்கு வழி வகுத்துள்ளது. உதாரணமாக, கடந்த 2012-13ம் நிதியாண்டில், பல்வேறு மதிப்பில், 955.40 கோடி நாணயங்கள் வெளியிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால்,687.80 கோடி நாணயங்கள் தான் புழக்கத்தில் விடப்பட்டன. நடப்பு நிதியாண்டில், 1,203.30 கோடி நாணயங்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பரிந்துரை:மத்தியஅரசு, சில்லரை தட்டுப்பாட்டை போக்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, ரிசர்வ்வங்கியை கேட்டுக் கொண்டுள்ளது.மேலும், நாணயங்கள் வெளியிடுவதை அதிகரிப்பதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் துணைகவர்னர் கே.சி. சக்ரபர்த்தி தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் அமலாக்கம் குறித்தும் மத்திய அரசு, ஆலோசித்து வருகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|