நாட்டின் மலர்கள் ஏற்றுமதி ரூ.423 கோடியாக வளர்ச்சிநாட்டின் மலர்கள் ஏற்றுமதி ரூ.423 கோடியாக வளர்ச்சி ... புதிய ஓய்வூதிய மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது புதிய ஓய்வூதிய மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சில்லரை தட்டுப்பாட்டிற்கு என்ன காரணம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2013
00:20

மும்பை:நாட்டில் சில்லரை நாணயங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், வியாபாரிகளும், பொதுமக்களும் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர்.முன்பு, ரிசர்வ் வங்கி, ரூபாய்க்கு மாற்றாக சில்லரை நாணயங்களை வழங்கி வந்தது.
ரிசர்வ் வங்கி:இப்பணி, தற்போது வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. வங்கிகள், சிறப்பு பிரிவு அமைத்து, சில் லரை நாணயங்களை வழங்குமாறு ரிசர்வ் வங்கி உத்தர விட்டுள்ளது.ஆனால், பல வங்கிகள் இதனை பின்பற்றாமல் உள்ளன. இதற்கு வங்கி அலுவலர்களின் வேலைப் பளு காரணமாக கூறப்படுகிறது.
ஒரு சில வங்கிக்கிளைகளில் பணியாற்றும் அலுவலர்களே, வியாபாரிகளுடன் கை கோர்த்து, மொத்தமாக சில்லரை நாணயங்களை வழங்கி விடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.முன்பு,சில ஏஜெண்டுகள், 3-5 சதவீதம் கமிஷனில் சில்லரை நாணயங்களை வழங்கி வந்தனர். இது, தற்போது 18 சதவீதம் வரை உயர்ந்து விட்டது.
வியாபாரிகள், சில்லரை தட்டுப்பாடு காரணமாக, பொருட்களின் விற்பனையை இழக்க விரும்பாமல், கூடுதல் விலை யில் சில்லரை நாணயங்களை வாங்கி வருகின்றனர். பிச்சைக்காரர்களும் கமிஷன் அடிப்படையில்,சில்லரை நாணயங்களை வழங்குகின்றனர். சில்லரை நாணயங்களின் பற்றாக்குறையை போக்க, கூடுதலாக நாணயங்கள் வெளி யிடப்படும் என, மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தது.
ஆனால்,அதன்படி வெளியிடப்படவில்லை. இதுவும் சில்லரை நாணயங்களின் பற்றாக்குறைக்கு வழி வகுத்துள்ளது. உதாரணமாக, கடந்த 2012-13ம் நிதியாண்டில், பல்வேறு மதிப்பில், 955.40 கோடி நாணயங்கள் வெளியிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால்,687.80 கோடி நாணயங்கள் தான் புழக்கத்தில் விடப்பட்டன. நடப்பு நிதியாண்டில், 1,203.30 கோடி நாணயங்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பரிந்துரை:மத்தியஅரசு, சில்லரை தட்டுப்பாட்டை போக்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, ரிசர்வ்வங்கியை கேட்டுக் கொண்டுள்ளது.மேலும், நாணயங்கள் வெளியிடுவதை அதிகரிப்பதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் துணைகவர்னர் கே.சி. சக்ரபர்த்தி தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் அமலாக்கம் குறித்தும் மத்திய அரசு, ஆலோசித்து வருகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)