பதிவு செய்த நாள்
11 செப்2013
01:22
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, நான்கு வர்த்தக தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.சென்ற வார இறுதியில், ரூபாய்மதிப்பு, 65.24 ஆக இருந்தது. இது, நேற்று, ஒரே நாளில், 140 காசுகள் உயர்ந்து, 63.84 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று, அன்னியச் செலாவணி சந்தையில், வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய்மதிப்பு, 64.47 ஆக இருந்தது. இது, வர்த்தகத்தின் இடையே, அதிக பட்சமாக 63.77 வரை சென்றது.அமெரிக்க மத்திய வங்கி, நிதி ஊக்குவிப்பு நடவடிக்கைகளை குறைக்காது என்ற எதிர்பார்ப்பு, சிரியா போர் குறித்து சுமுக தீர்வு காண்பதற்கான ‹ழுல் உருவானது போன்றவற்றால், இந்தியா உள்ளிட்ட சர்வதேச பங்குச் சந்தைகள் எழுச்சி கண்டன.
மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள், புதிய அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளின் கீழ், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாம் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு காரணமாகவும், ரூபாய்மதிப்பு உயர்ந்தது.கடந்த வாரம், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜன் பதவியேற்றதில் இருந்து, ரூபாய்மதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதன் எதிரொலியாக, ரூபாய்மதிப்பின் தொடர் சரிவு தடுக்கப்பட்டு, தற்போது அதன் மதிப்பு உயர்ந்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|