பதிவு செய்த நாள்
11 செப்2013
10:13
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 103.14 புள்ளிகள் குறைந்து 19893.96 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 32.35 புள்ளிகள் குறைந்து 5864.40 புள்ளிகளோடு காணப்பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று மிகவும் சிறப்பாக இருந்தது. டாலருக்கு எதிரான, ரூபாயின் வெளி மதிப்பு உயர்வு மற்றும் சிரியா ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்கும் நிலையில், அமெரிக்கா ராணுவ தாக்குதல் நடத்தாது என்ற, பாரக் ஒபாமாவின் அறிவிப்பு போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதையடுத்து, "சென்செக்ஸ்', 3.77 சதவீத உயர்வுடனும், "நிப்டி' 3.81 சதவீத அதிகரிப்புடனும் முடிவடைந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|