இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.62.10இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.62.10 ... தங்கம் விலை ரூ.32 உயர்ந்தது தங்கம் விலை ரூ.32 உயர்ந்தது ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
வறட்சியால் வரத்து குறைவு: வாழை இலை விலை ஏற்றம்: ஒரு கட்டின் விலை ரூ. 3,000
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2014
11:28

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பகுதியில் நிலவும் வறட்சியால், சந்தைக்கு வாழை இலைகள், வரத்து குறைந்து வருகிறது. பிற மாவட்ட வியாபாரிகள் இங்கு முற்றுகையிடுவதால் இலைக் கட்டு நேற்று 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.

வத்தலக்குண்டில் வாழை இலை மார்க்கெட் 50 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. ஆத்தூர், நிலக்கோட்டை, குள்ளப்புரம், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கண்ணாபட்டி பகுதிகளில் இருந்து இலைக் கட்டுகள் விற்பனைக்கு வருகின்றன. அங்கிருந்து தினமும் சென்னை, பெங்களூரு, சேலம், நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளுக்கு வாழை இலை விற்பனைக்கு செல்கிறது. இப்பகுதியில் நிலவும் வறட்சியால் சந்தைக்கு இலை வரத்து குறைந்து உள்ளது. தினமும் 8 ஆயிரம் இலைக்கட்டுகள் விற்பனையாகும் சந்தையில், 3 ஆயிரத்திற்கும் குறைவான இலை கட்டுகளே விற்பனைக்கு வருகின்றன. அவற்றை வாங்குவதற்கு வெளியூர் வியாபாரிகள் வத்தலக்குண்டு சந்தையில் குவிகின்றனர். இதனால், இலைக்கு கிராக்கி ஏற்பட்டு, நேற்று 200 இலை கொண்ட ஒரு கட்டு, அதிகபட்சமாக ரூ.3 ஆயிரத்திற்கும், குறைந்த பட்சமாக ரூ.ஆயிரத்து 500 க்கும் விற்றது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில்லரை விற்பனையில் ஒரு இலையின் விலை ரூ. 15 ஆக உள்ளது.

கமிஷன் கடை உரிமையாளர் தியாகராஜன் கூறுகையில், "வியாபாரிகளுக்கு இலை கட்டு கொடுக்க முடியவில்லை. தை மாதமே இப்படி என்றால், கோடை யில் எப்படி சமாளிக்கப் போகிறோம் என தெரியவில்லை,” என்றார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)