தங்கம் விலை ரூ.88 அதிகரிப்பு - மீண்டும் ரூ.22 ஆயிரத்தை தொட்டதுதங்கம் விலை ரூ.88 அதிகரிப்பு - மீண்டும் ரூ.22 ஆயிரத்தை தொட்டது ... இந்தியாவின் வளர்ச்சி - 5.4 சதவீதமாக உயரும் : ஐஎம்எப்., இந்தியாவின் வளர்ச்சி - 5.4 சதவீதமாக உயரும் : ஐஎம்எப்., ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூ.10 கோடி கள்ள நோட்டுக்கள் - ஐசிஐசிஐ., வங்கி புகார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2014
14:37

புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் பல்வேறு கிளைகளில், கடந்த பல ஆண்டுகளாக ரூ.10 கோடிக்கும் மேலான கள்ளநோட்டுகள் டெபாசிட்டு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஐசிஐசிஐ சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006 முதல் 2014ம் ஆண்டு வரை உத்திர பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் மாநிலங்களில் உள்ள பல ஐசிஐசிஐ வங்கி கிளைகளில் ரூ.10.77 கோடி கள்ளநோட்டு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஹஸ்ரட்கஜ் ‌பகுதி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ வங்கியின் மண்டப தலைவர் மணிஷ் பாண்டே தெரிவித்துள்ளார். 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலங்களிலேயே அதிக அளவில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் பேரில் கள்ள நோட்டுக்களை கண்டறியும் பணியின் போது கள்ளநோட்டுக்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கள்ளநோட்டுக்கள் மற்றும் சேதமடைந்த நோட்டுக்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணியை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. தற்போது ஐசிஐசிஐ வங்கியில் அதிக அளவில் கள்ளநோட்டுக்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதை அடுத்து, இந்த பணி மேலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற கள்ள நோட்டுக்கள் புழங்குவதை கண்காணித்து அனைத்து வங்கிகளும் அறிக்கை அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது. மேலும் கள்ளநோட்டுக்கள் குறித்த விபரங்களை ரிசர்வ் வங்கி, போலீஸ் ஆகியோரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)