பதிவு செய்த நாள்
17 ஏப்2014
17:21
மும்பை : கடந்த மூன்று தினங்களாக சரிவில் இருந்து வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று(ஏப்ரல் 17ம் தேதி) அதிக ஏற்றத்துடன் முடிந்தன. சென்செக்ஸ் 351 புள்ளிகளும், நிப்டி 104 புள்ளிகள் உயர்ந்தும் முடிந்தன. டிசிஎஸ்., எச்சிஎல். டெக்., நிறுவனங்களின் காலாண்டு நிகரலாபம் அதிகரித்தது, அதன்காரணமாக அந்நிறுவன பங்குகளை விலை உயர்ந்தது, ஆசிய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் இருந்தது, முக்கிய நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு வாங்க ஆர்வம் காட்டியது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் இன்று உயர்வுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவின்போது மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 351.61 புள்ளிகள் உயர்ந்து 22,628.84-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 104.10 புள்ளிகள் உயர்ந்து 6,779.40-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 29 நிறுவன பங்குகள் விலை உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், டிசிஎஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் அதிக லாபம் பெற்றன. அதற்கு அடுத்தப்படியாக ஆக்சிஸ், ஐசிஐசிஐ., எச்டிஎப்சி., பார்தி ஏர்டெல், பெல், கெயில், ஹிண்டால்கோ, ஐடிசி., மாருதி சுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், டாடா பவர்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட இதர பங்குகளும் லாபம் பெற்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|