பதிவு செய்த நாள்
24 ஏப்2014
01:04
கொச்சி:ஏலக்காய் அதிகளவில் உற்பத்தியாகும், கேரளா மற்றும் தமிழகத்தில், இதன் அளிப்பு குறைந்து வருகிறது.இதையடுத்து, தரம் வாய்ந்த ஒரு கிலோ ஏலக்காய் விலை, 832 ரூபாயாக அதிகரித்து உள்ளது.நடப்பு பருவம் முடிவடையும் சூழலில், ஏலக்காய் வரத்து குறைந்து வருவதையடுத்து, தற்போது, இதன் விலை உயர்ந்து வருகிறது.
இருப்பினும், ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ள, ஏலக்காய் பருவத்தில், இது வரையிலுமாக, சந்தைகளுக்கு, 18,438 டன் ஏலக்காய் வந்துள்ளது.இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 11,130 டன்னாக இருந்தது.இது வரையிலுமாக, 17,923 டன் ஏலக்காய் விற்பனையாகி உள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 10,604 டன்னாக இருந்தது.ஏப்., 17ம் தேதி, ஒரு கிலோ ஏலக்காயின் சராசரி விலை, 623 ரூபாயாக இருந்தது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 743 ரூபாய் என்ற அளவில், சற்று உயர்ந்து காணப்பட்டது.
கேரளாவில், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வறட்சி நிலவுவதால், ஏலக்காய் வரத்து குறைந்துஉள்ளது. இதன் காரணமாகவே, அண்மைக்காலமாக இதன் விலை உயர்ந்து வருகிறது என, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|