பதிவு செய்த நாள்
24 ஏப்2014
01:25
மும்பை:கடந்த ஒரு சில தினங்களாக மந்தமாக இருந்த பங்கு வர்த்தகம், நேற்று விறுவிறுப்புடன் காணப்பட்டது.அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்ததையடுத்து, ‘சென்செக்ஸ் மற்றும் ‘நிப்டி முறையே, 0.52 சதவீதம் மற்றும் 0.37 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தன.குறிப்பாக, சென்ற செவ்வாயன்று மட்டும், அன்னிய முதலீட்டாளர்கள், நிகர அளவில், 163 கோடி ரூபாய் மதிப் பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என, ‘செபி’ தெரிவித்துள்ளது.
ஐரோப்பா மற்றும் இதர ஒரு சில ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 118.17 புள்ளிகள் அதிகரித்து, 22,876.54 புள்ளிகளில் நிலைகொண்டது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 22,912.52 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 22,780.13 புள்ளிகள் வரையிலும் சென்றது.
‘சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், எல் அண்டு டி, கெயில், பெல், டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட, 18 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், என்.டி.பி.சி., விப்ரோ, டி.சி.எஸ்., உள்ளிட்ட, 10 நிறுவனப் பங்குகளின் விலை சரிவு அடைந்தும் இருந்தன.அதேசமயம், ஹிண்டால்கோ, பஜாஜ் ஆட்டோ ஆகிய இரண்டு நிறுவனப் பங்குகளின் விலை மாற்றமின்றி இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி 25.45 புள்ளிகள் உயர்ந்து, 6,840.80 புள்ளிகளில் நிலை பெற்றது.வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,861.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,820.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|